Saturday, December 22, 2007

3. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள் என்ற லெனின் எழுதிய புத்தகம் மூன்றாவதாக வெளியிடப்படுகின்றது.

pdf (3.9MB)




எமது வெளியீடுகள்

1. மரியாதைராமன் கதைகள்
2. வி. இ. லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து"
3. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்"

2. வி. இ. லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து"

வி. இ. லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து" என்ற புத்தகம் 2 ஆவதாக வெளியிடப்படுகின்றது. இதன் ஆசிரியர் எஸ். ஏ. ஸெராயெவ்.

pdf (3.18MB)





எமது வெளியீடுகள்

1. மரியாதைராமன் கதைகள்
2. வி. இ. லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து"

Monday, December 10, 2007

1. மரியாதைராமன் கதைகள்

மரியாதைராமன் கதைகள் எமது முயற்சியின் முதல் மின்புத்தகமாக வெளியிடப்படுகிறது. Happy reading!

pdf (1.87MB)





அத்துடன் வெளியூரில் வாழும் வாசகர்கள் தமக்கு மிக அவசியம் என எண்ணும் புத்தகங்கள் பற்றி தெரிவித்தால் அவற்றை ஸ்கேன் செய்ய முயல்வோம். Have fun!

Saturday, December 1, 2007

நீங்களும் வாருங்கள்

புத்தகங்களை இணையத்தில் கிடைக்கச் செய்யும் முயற்சிக்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

இந்த முயற்சியில் யாரும் இணைந்து பங்களிக்கலாம். ஆனால் யாரும் தம்மைப் பற்றிய விபரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தக் கூடாது. இது முழுக்க முழுக்க சமூகத் தொண்டாகும். சுய விளம்பரம் என்ற இலாபத்தைக்கூட எதிர்பார்க்காத தொண்டாகும்.

மேலும் இந்திய புத்தகங்கள் மட்டுமே வெளியிடலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் எம்மிடம் இல்லை. இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் மற்றும் எத்தேசத்துப் புத்தகம் என்றாலும் அதனை எமது வலைப்பதிவினூடாக அறிமுகம் செய்யலாம். இலக்கியம் அல்லாத புத்தகங்களுக்கும் தகுந்த கவனம் செலுத்துவோம்.

மேலும் குறிப்பிட்ட தளமொன்றில் சேர்த்துவைக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகளும் எம்மிடம் இல்லை. இணையத்தில் எங்கு வெளியிட்டாலும் அதனை அறிமுகம் செய்ய நாம் தயாராக உள்ளோம்.

ஆக்கபூர்வமான முயற்சியாக அமைய வேண்டும் என்பது ஒன்றுதான் எமது நிலைப்பாடு ஆகும். புத்தகங்களுடன் சேர்த்து விளம்பரங்களோ, நன்கொடை வேண்டுகோள்களோ வெளியிடப்பட மாட்டாது.

தமிழை பரப்ப வேண்டும் என்ற ஒரே உண்மையான எண்ணம் கொண்டவர்கள் மட்டும் வாருங்கள். வாருங்கள். வாருங்கள்.

தமிழ் வலைப் பதிவுகளில் முதல் முறையாக ...

தமிழ் வலைப்பதிவுகளில் முதல்முறையாகப் புத்தகங்களை முழுமையாக இணையத்தில் கிடைக்கச் செய்யும் முயற்சியை நாம் தொடங்கியுள்ளோம்.

இது எதுவித இலாபக் குறிக்கோள்களும் அற்ற சமூகத் தொண்டாகும். நாம் வெளியிடப்போகும் புத்தங்களில் எதுவித விளம்பரங்களும் இணைக்கப்படாது. புத்தகங்களை வாசிக்க எந்தவிதக் கட்டணங்களும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் எமது இந்த முயற்சிக்கு எதுவித நன்கொடைகளும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் வெளியிடுவதே எமது நோக்கம் ஆகும். போதிய வரவேற்புக் கிடைத்தால் எமது முயற்சிகள் தொடரும்.

புத்தகங்களை இணையத்தில் வெளியீடு செய்வதில் ஸ்கேன் செய்து வெளியிடும் முறையையே நாம் பின்பற்ற உள்ளோம். இதற்கான செயல்முறையை அறியத்தந்த அன்பருக்கு நன்றிகள்.

அன்பான வாசகப் பெருமக்களே, தமிழ் வலைப்பதிவுலகில் முதல் முறையாக புத்தகங்களை மின்வடிவில் வெளியிடும் முதல் வலைப்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றோம். .

நல்ல காலம் பிறக்குது !!!

இணையத்தில் தமிழ்ப் புத்தகங்கள்

ஆங்கிலத்தில் வெளிவரும் புத்தம்புதிய புத்தகங்களும், இதழ்களும் உடனுக்குடன் இணையத்தில் கிடைக்கின்றன. சைன்ஸ், பிசி வேர்ல்ட், பிசி மகசின், த எக்கனமிஸ்ட், பிசினஸ்வீக் போன்ற இதழ்கள் கடைக்கு வரமுன்னரேயே இணையத்தில் வெளியாகின்றன.

கணினித் துறை புத்தகங்களுக்கும் குறைவேயில்லை. கணினி துறையின் சகல புத்தகங்களும் இணையத்தில் உடனுக்குடன் படிக்கக் கிடைக்கின்றன.

அதுமட்டுமா? சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் போன்ற பிரபல எழுத்தாளர் புத்தகங்களும் நோம் சாம்ஸ்க்கி போன்ற அறிஞர்களின் எழுத்துக்களும் சுயமுன்னேற்ற நூல்களும் சமயப் புத்தகங்களும் நாவல்களும் பெருமளவில் கிடைக்கின்றன். செக்ஸ் புத்தகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

ஆனால் தமிழ்ப் புத்தகங்களின் நிலையோ பரிதாப நிலையில் உள்ளது. புதிய விதயங்களைக் கொண்டு வெளிவரும் ஒரு புத்தகம்தானும் இணையத்துக்கு வருவதில்லை. வார, மாத இதழ்கள் கூட பி-டி-எப் பைல்களாக வெளியிடப் படுவதே இல்லை.

ஒரேயடியாக ஒன்றுமேயில்லை என்றும் கூறிவிட முடியாது. இலங்கையை சேர்ந்தவர்கள் நூலகம் என்னும் திட்டத்தின் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். மின்வருடி வெளியிடுவதில் தமிழில் இவர்களையே முன்னோடிகள் எனலாம். ஆனால் நூலகத் திட்டம் இலங்கைப் புத்தகங்களை மட்டுமே வெளியிடுகிறது. இந்தியப் புத்தகங்களை வெளியிடுவதில்லை என்று அறிவித்துள்ளனர். அத்துடன் இவர்கள் வெளியிடும் பெருமளவு புத்தகங்கள் இலக்கியப் புத்தகங்களே ஆகும்.

வேறு தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதோ மிக மிக அரிதாகவே உள்ளது. வாசகர்கள் அதிகம் விரும்பும், வாசிக்கும் புத்தகங்கள் இணையத்துக்கு வருவதே இல்லை எனலாம்.

இந்த பெரிய இடைவெளியை சிறிதளவேனும் நிரப்ப நாம் முன்வந்துள்ளோம். இது தொடர்பான பரபரப்பான அறிவித்தல்களை விரைவில் எதிர்பாருங்கள்.